
கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
தொந்திரவு செய்யாதே எனச்
சொல்வது போல்
எட்டிப் பார்த்து விடைபெறும் தூறல்;
பெண்ணே ! நீயோ !
சில நேரம் இடையினம்
பலநேரம் வல்லினம்
மழையிடம் தமிழ் கற்ற
மங்கை நீயோ !
இக்கணம் இலக்கணம்

கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
தொந்திரவு செய்யாதே எனச்
சொல்வது போல்
எட்டிப் பார்த்து விடைபெறும் தூறல்;
பெண்ணே ! நீயோ !
சில நேரம் இடையினம்
பலநேரம் வல்லினம்
மழையிடம் தமிழ் கற்ற
மங்கை நீயோ !
இக்கணம் இலக்கணம்
Comments are closed.
இக்கணம் ஒரு கணம் இலக்கணமே மாறுதோ!
மெல்லினம் வல்லினமானதே மீறலோ!
விரல் நுனிகளில் தெறிக்கும் மழையே முத்தாகி நகமாய் உறைந்ததோ – நும் கவிதை
தேறலாய் மனதில் உறைந்தது -சிறு
கீறலாய் மின்னிப் புதைந்தது!
தங்கள் கவிதைப் பின்னூட்டம் களிப்பை அளித்தது. நன்றி.