நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியிலிருந்து…….

  1. உன் உலகத்தில இருப்பது
    தான் குதூகலமாக இருக்கிறது

சுசீலாவின்
கடிதத்திலிருந்து,

2. நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
“யார்?”
என்று கேட்டேன்
“நான்தான்
சுசீலா
கதவைத் திற”
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?