செ.புனிதஜோதி கவிதை

சோளக்காட்டு பொம்மையின்
தலையில் எச்சம் போட்ட
கூட்டமென்பதை மறந்துவிட்டு.

மொட்டைமாடியில்
பரப்பிவிடப்பட்ட
கோதுமைக்கு அருகில்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கருப்புத்துணியை
பறக்கவிட்டேன்…

கால் வரிசையில்
ஒருகவிதையும்
தன் வாய் வரிசையில்
ஒருகவிதையுமாய்
எழுதிவிட்டு சென்றிருந்தது
சிறகுகளின் அத்தாட்சியோடு.

4 Comments on “செ.புனிதஜோதி கவிதை”

Comments are closed.