கணேஷ் வெங்கட்ராமன் கவிதை

ஒவ்வொரு முறையும்
அதே பாதையில் வழி நடத்துகிறாய்

முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!

காலில் குத்திய
கல்லை நோக்குகையில்
பளிச்சென பிரகாசம்
கல்லின் மறு பாதி
இருண்டு கிடந்தது
இருட்டும் பிரகாசமுமாய்
கல்லின் இரு புறங்கள்
கல் இருள்கிறதா
பிரகாசிக்க முயல்கிறதா

புவியும் ஒரு கல்
அதன் இருளின் ஒளியின்
மூலம் ஒன்று

செல்லும் பாதையைச்
சலித்துக் கொள்ளாதே

பாதையில் நடக்கையில்
கவனத்துடன்
ஒரு பாதி இருண்டு
மறு பாதி ஒளிரும் கல்லைத் தேடு

One Comment on “கணேஷ் வெங்கட்ராமன் கவிதை”

Comments are closed.