காற்றுப் படாத கார்மேகம் /ராஜாமணி


தாத்தா திடீரென இறந்து போனார் .
பலரும் வந்தார்கள்.
பாட்டி
அப்பா
அம்மா
அத்தை எல்லோரிடமும் எல்லோரும் பேசினார்கள் .
அவர்கள் அழுதார்கள். யாரும் பேசாத, யாருடனும் பேசாத
பேரனின் கண்களில் ஆற்றுப்படுத்தாத கண்ணீராய்
இன்றுவரை இருக்கிறது

தாத்தாவின் மறைவு

One Comment on “காற்றுப் படாத கார்மேகம் /ராஜாமணி”

Comments are closed.