ரயில் கதைகள் /நாகேந்திர பாரதி

சேர்க்கை
————
சேராத தண்டவாளங்களைச் சேர்த்தபடி படுத்தவர்களை, சேர்த்து வைத்தது ரயில்

சுமை
———-
குடும்பத்தோடு ரெயிலில் புறப்பட வந்து கொண்டிருந்தான் இரண்டு கைகளிலும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ,
ரெயில்வே போர்ட்டர்

முன்னெச்சரிக்கை
——————-

பிளாட்பாரத்தில் பெண்கள் கோச் போர்டு பார்த்து விலகி தள்ளி நின்றவன் எதிரே வந்து நின்றது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்