நான்கு சொடுக்குக் கதைகள்/ஜெ. பாஸ்கரன்

ஊருக்குப் போக ரயில் நிலையம் வந்தவன், கோச்சை விட்டு எஞசினுக்கு வந்தான், பழக்க தோஷத்தில், என்ஜின் டிரைவர்!

********

கிணற்றில் தூர் வாரிக்கொண்டிருந்தவன் கையில் கிடைத்தது பாதாளக் கரண்டி – எதையோ எடுக்க உள்ளே வந்து, தானே விழுந்துவிட்ட பரிதாபம்!

*********(

நாலும் மூணும் ஆறு என்றான் கணக்கு வாத்தியார் பிள்ளை. கணக்கு சரிதான், மீதி ஒன்றை எங்கே வைத்திருக்கிறாய் என்றான் அரசியல்வாதியின் மகன்!

*********

போலீசிடமே மாமூல் கேட்டான் உள்ளே வந்த திருடன்.