மூன்று சொடுக்குக் கதைகள்/இந்திர நீல சுரேஷ்

  1. காலையிலிருந்து
    காட்டுவழியில்
    துணைக்கு வந்தவன்
    மாலையிலே சொல்லாமல்
    மலைக்கடியில்
    மறைந்து போனான், பெயர்
    ஆதவனாம்

2. இரண்டு நாளாய் நிற்காமல் மழை

கவலையோடு காத்திருந்தான் அவன்

மதியம் சிறிய வெளிச்சக் கீற்று ..

அவசரமாகத் தண்ணீர் லாரிக்கு போன் செய்தான்

3. ஓடிக்கொண்டிருந்த விரைவு ரயில்

தடக் என பிரேக் போட்டுக் குலுக்கி நின்றது

பாவம் எருமைமாடோ ..னு பயந்து போயிட்டேன்

என்றார் டிரைவர், எட்டிப் பார்த்தவரே

தண்டவாளத்தில் மனிதன்