சொடுக்குக் கதை 4
அவன் ராத்திரி முழுவதும் தூங்கவில்லை. காலையில் எழுந்தவுடன் சொடுக்குக் கதை
எழுத ஆரம்பித்து விட்டான்
சொடுக்குக் கதை 5
வீட்டில் அவனுக்கு நல்ல பெயர் கிடையாது. ஏனென்றால் அவன்
த்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறான்.
சொடுக்குக் கதை 6
திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம் போய் வந்தான்.
காரில் திரும்பி வரும்போது ‘நான் யார்”
என்று கேட்டுக்கொண்டே வந்தான்.
சொடுக்குக் கதை 7
அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். ரம்மியமான சூழல்.
காற்று அடித்தது. சூரியன் மெல்ல மெல்ல உதித்துக் கொண்டிருந்தான்.
சொடுக்குக் கதை 8
தலைகாணி சைஸில் கெமிஸ்ட்ரி புத்தகங்களைப் புரட்டிக்
கொண்டிருந்தாள் பேத்தி.