சொடுக்குக் கதை/அழகியசிங்கர்

சொடுக்குக் கதை 4

அவன் ராத்திரி முழுவதும் தூங்கவில்லை. காலையில் எழுந்தவுடன் சொடுக்குக் கதை
எழுத ஆரம்பித்து விட்டான்

சொடுக்குக் கதை 5

வீட்டில் அவனுக்கு நல்ல பெயர் கிடையாது. ஏனென்றால் அவன்
த்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறான்.

சொடுக்குக் கதை 6

திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம் போய் வந்தான்.
காரில் திரும்பி வரும்போது ‘நான் யார்”
என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

சொடுக்குக் கதை 7

அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். ரம்மியமான சூழல்.
காற்று அடித்தது. சூரியன் மெல்ல மெல்ல உதித்துக் கொண்டிருந்தான்.

சொடுக்குக் கதை 8

தலைகாணி சைஸில் கெமிஸ்ட்ரி புத்தகங்களைப் புரட்டிக்
கொண்டிருந்தாள் பேத்தி.