
23. கத்திரிக்கோல்
“செங்கமலப் போது அலர்ந்த செவ்வி போலும் வதனம்
தங்கு மொழி சந்தனம் போலும் – பங்கி எறி
கத்திரியைப் போலும் இளம் காரிகையே வஞ்ச மனம்
சூத்திரர் பால் மூன்று குணம்”
விளக்கம்: இளமை வளம் மிக்க அழகியே! வஞ்சக மணம் கொண்ட தீயவருக்கு மூன்று குணங்கள். அவை
- மலர்ந்த செந்தாமரை போன்ற முகம்
- சந்தனம் போற்ற குளுமையான பேச்சு
- கத்தரிக்கோல் போல வெட்டும் செயல்
