இன்று கவிஞர்.சி.மணியின் நினைவு தினம்…

இடையீடு

இளநீரும் கிடைக்கும்.
என்றோ ஒருமுறை

  1. சொல்ல விரும்பிய தெல்லாம்
    சொல்லில் வருவதில்லை
  2. எத்தனையோ மாற்றங்கள்
    குறிதவறிய ஏமாற்றங்கள்
    மனம்புழுங்க பலவுண்டு
    குதிரை வரைய குதிரையே
    வராது; கழுதையும் வரலாம்.
    இரண்டும் கலக்கலாம்.
    எலிக்குப் பொறிவைத்தால்
    விரலும் விழுவதுண்டு.
    நீர்தேடி அலையும்போது
    இளநீரும் கிடைக்கும்.
  3. என்றோ ஒருமுறை
    வானுக்கு விளக்கடிக்கும்
    வால் மீனாக
    சொல்ல வந்தது சொல்லில்
    வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
    கனியின் இனிமை
    கனியில் மட்டுமில்லை,
    சுவைப்போன் பசியை,
    சுவைமுடிச்சைச் சார்ந்தது.
  4. எண்ணம்
    வெளியீடு
    கேட்டல்
    இம்மூன்றும் எப்போதும்
    ஒன்றல்ல ஒன்றென்றால்
    மூன்றான காலம்போல் ஒன்று