
1)
வளையினுள் ஒளிந்திருக்கும் எலி.
வளையின் வெளியே
பொறுமையாகப்
பூனை.
🦋 🦋 🦋
2)
தான்
எத்தனை
எம்பினாலும் எட்டாத நிலா
தண்ணீருக்குள்
நிலவைக்
கலைத்து விடும்
தென்னை.
🦋 🦋 🦋
3)
கதவைத் திறக்க
இயலாமை.
அவன் உரத்த குரல்
வீடு முழுதும் முட்டி
மோதித் திரும்புகிறது
அவனிடமே
🦋 🦋 🦋
4)
பிறர் கேளாமல்
கூறப்பட்ட
ரகசியம்
உலகெங்கும்
ஒலிக்கிறது
காற்றின் குறும்பினால்
🦋 🦋 🦋
