லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை

வழக்கத்திற்கு மாறான ஒன்றும்
இந்தக் கடை வீதியில் இல்லை
வழக்கத்தைக் காட்டிலும்
குறைவே
என்றாலும் நெடுநாட்களுக்குப் பிறகு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு பேரழகு
மயங்கும் இளவெயில்
அதனுள் அடங்கும்
மனித நடமாட்டம்

என்னுடைய வீதிதான்
இதில்தான் நாட்பகலாக
புழங்குகிறேன்
இப்பொழுது வினோதமாக இருக்கிறது

என்னுடையது போலுமில்லையோ
இது?

( மீள்)