நவராத்திரி


ஆர் வத்ஸலா

எனக்கு துர்க்கையாக வேண்டாம்
லக்ஷ்மி சரஸ்வதியாகவும்

எனது அடையாளத்தை
என் நெற்றி மையத்திலுள்ள பொட்டின் நிறத்திலும்
கழுத்தில் தொங்கும்/ தொங்கா ஏதோ ஒன்றிலும்
எனக்குத் தரும்
வெற்றிலை பாக்கு பையில் வைக்கா பொருட்களிலும் அடைக்காமலிருங்கள்
அது போதும்
மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்

எனக்கு கொலு
பார்க்கப் பிடிக்கும்
அதில் அமர அல்ல

One Comment on “நவராத்திரி”

Comments are closed.