உடல் நல பாதிப்பின் காரணமாக/சீதாலட்சுமி

உடல் நல பாதிப்பின் காரணமாக, அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் தன் குறையை சுட்டிக் காட்டி, யாரும் அனுதாபமாகப் பேசுவதை அவர் விரும்பியதேயில்லையாம்.

விமரிசகர் ஒருவர், அனுதாபம் காரணமாக, சூடாமணியின் எழுத்தை, தாம் பாராட்டி எழுதுவதாக சொன்னதாக அறிந்தபோது, சூடாமணி சொன்னாராம். “இந்தப் (அனுதாபத்தை முன்னிறுத்திய)பாராட்டு என்னை வருத்துகிறது. இதை விட, அவர் என் எழுத்தை கடுமையாக விமரிசித்திருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பேன்”.

எழுத்தாளர் அனுத்தமா அவ்ர்கள், தன் கணவரின் மறைவுக்குப் பின், எழுதுவதை கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறுத்தியிருந்தாராம். மீண்டும் எழுதத் தொடங்கிய போது, 20 அத்தியாயங்களுக்கு மேல் அவரால் எழுத முடியாமல் போய் விட்டதாம். தன்னுள் இருந்த எழுத்தாளர் இனி இல்லை என்று அவர் சூடாமணி அவர்க்ளிடம் சொன்ன போது, சூடாமணி அவருக்கு மிகுந்த மன தைரியம் சொல்லி எழுத வைத்தாராம். எப்படிப்பட்ட அன்புள்ளம்!

சூடாமணி அவர்களிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ வாசகிகள், அவரின் ரசிகைகள், அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். இதே சென்னையில்தான் அவர் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். ஆனால், என்னால், அவரை நேரில் பார்க்க முடியாமல் போய் விட்டது. என் மனதில் அவர் மீது உள்ள மதிப்பையும் மரியாதையையும் அவரிடம் தெரிவிக்க முடியாமல் போய் விட்டதே என்று தோன்றுகிறது. என்னைப் போல பலர் இருந்திருப்பார்கள், அவர்களைப் பற்றி, வாசகிகளின் அன்பைப் பற்றி, தெரிந்து கொள்ளாமலேயே அவர் மறைந்து விட்டார்.

நன்றி: அறுசுவை.காம்

முகநூல் பதிவு : ஆர்.கந்தசாமி