மகிழ் ஒவ்வொரு மணித்துளியிலும்/முருகு

நகரும் நதிக்கு
நிகரானது நேரம்…

ஓடும் நதியில்
ஒருமுறை தொட்ட

நீர்த்துளி நிற்பதில்லை !!!
நீ மறுமுறை தொட…

அத்துளி தந்த அதே சிலிர்ப்பை
அடுத்து வரும் துளி தருமா?…

மணித்துளியும் அப்படித் தான்…
மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…