நகுலனின்சுருதி கவிதைகள்

நகுலன்

தனிமை

நண்பர்கள்
வருகிறார்கள்
வந்த பின்
போகிறார்கள்
தனிமையில்
தள்ளப்பட்ட நான்
அவர்கள்
வந்ததா
அல்லது
சென்றதா
உண்மையில் உண்மை
என்ற உள் போதத்தில்
என்னிடமிருந்தே
நான்
வந்து கொண்டும்
போய்க்கொண்டுமிருக்கின்றேன்.

அவன்

“செத்துவிட்டான்”
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.