பெரிய புராணம்
இறைவனை அன்புடன் .பக்தியுடன் வேண்டுபவர்கள் அவனிடம் எந்த கோரிக்கையையும்
வைக்க மாட்டார்கள் என்பதை சொல்கிறது இந்த பெரியபுராண பாடல்.
பாடல்:
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
பொருள்;
கேடு மாக்கமுங் = நல்லதும், கெட்டதும்
கெட்ட திருவினார் = இல்லாத சிறந்தவர்கள்.
ஓடுஞ் = வீடும்
செம்பொனும் = செம்மையான பொன்னும் (தங்கம்)
ஒக்கவே நோக்குவார் = ஒன்றாக நினைப்பார்கள்
கூடும் அன்பினில் = மனதில் கூடி வரும் அன்பினால்
கும்பிட லேயன்றி = கும்பிடுவார்களே அன்றி
அவர்கள்
வீடும் = வீடு பேறும் (சொர்கமும்)
வேண்டா = வேண்டாத
விறலின் = வெற்றியில்,
விளங்கினார் = இருந்தார்கள்.