இனிக்கும் தமிழ் -133/- டி வி ராதாகிருஷ்ணன்

யார் கடவுள்?

ஆதிநாதன் வளமடல் என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப்பட்டது.
கலிங்கத்துப் பரணி எழுதிய அதே ஜெயங்கொண்டார்தான்.

மிக மிக இனிமையான பாடல்களை கொண்டது. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல் எல்லாம் கலந்தது.

அதில் இருந்து ஒரு பாடல்…

காதல் வயப்பட்டவர்களுக்கு யார் கடவுள்..என்று சொல்கிறார் பாருங்கள்

சிவனுமில்லையாம்..விஷ்ணுவும் இல்லையாம்..படைத்த பிரம்மாவும் இல்லையாம்.

தங்கள் காதலுக்கு தூது போனவர்தான் கடவுளாம்

கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் – இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு

கொன்றை முடித்தார்க்கும்= கொன்றை மலரை அணிந்த சிவனும்
கோபாலர் ஆனார்க்கும் = பசுக்களுக்கு (கோ = பசு ) தலைவன் ஆன திருமாலும்
அன்று படைத்தார்க்கும் = அல்லது எல்லோரையும் படைத்த பிரம்மாவும்
ஆளல்லேம் = எனகளுக்கு ஒரு பொருட்டில்லை

இன்று = இன்று

மடப்பாவையார் = என் காதலியிடம்

நம் வசமாகத் தூது = எனக்காக யார் தூது

நடப்பாரே= போவார்களோ

தெய்வம் நமக்கு= அவர்களே எங்களுக்கு தெய்வம்