ப்ரியா கல்யாணராமன் இறந்து விட்டாரா?/அழகியசிங்கர்

சற்று நேரத்திற்கு முன் முகநூலில் ப்ரியா  கல்யாணராமன் மரணம் அடைந்துவிட்டார் என்று கே.என் சிவராமன்  குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் துயர செய்தியை நம்புவதற்குச் சங்கடமாக இருக்கிறது. 

“தீராநதி திரும்பவும் வருகிறது.  நீங்கள் எழுதுங்கள்.  வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.  

கொரானாவிற்கு முன் மூகாம்பிகை காம்ப்ளெக்ஸில்  நடத்திக்கொண்டிருந்த விருட்சம் கூட்டங்களுக்கு ஒரு முறை வந்திருந்து என்னை ஆச்சரியப்படுத்தியவர்.  அவருடைய வேலைப் பளுவில் அவரால் வர முடியாது என்று நம்பியிருந்தேன்.

புத்தகக் காட்சியில் அவரைப் பார்க்கும்போது  என் புத்தகங்களை அவருக்குப் படிக்கக் கொடுப்பேன். 

இன்று அவர் இல்லை என்பதை  நினைக்கும்போது வருத்தமாக  இருக்கிறது.