ரா க் கெ ட் ரி நம்பி விளைவு வி ம ர் ச ன ம்/சப்தரிஷி லா.ச.ரா


நேற்று (ம்) இந்தக்காவியம்பார்த்தேன்
ஒருகல்யாணத்திற்கு கிளம்புவதில் ஆரம்பித்துவேறு கல்யாணத்தில் இருந்துவீட்டிற்குகிளம்புவதில். முடிகிறது
பல இடங்களில் இந்தியப் பெருமையை நிலை நாட்டியபடியே இருக்கிறார்..ஒருபெண் அவரை செல்லமாய் சீண்டும் போது நீ சிரிக்கும் போது என் பையன் சிரிக்கறா மாதிரியே இருக்கு என்கிறார்..
இஞ்சின் 180 செகண்ட்ஓடி வெற்றி அடையும்போது எதிர்பாராவிதமாய் அந்தப்பெண் கட்டியணைத்து முத்த மிட்டபோது அதிர்ச்சி யடைந்து தயங்கி தன்கைகூப்புகிறார் இப்பேற் பட்டவரை மரியம் என்ற பெண் ணோடு சம்பந்தப்படுத்தி கைது செய்து வதைக்கிறார்கள்..
மூணுகிலோமீட்டர் நடந்து போய் ரெண்டுகுடம் தண்ணிஎடுத்துவந்து அதை நாலுபேர்கொண்டகுடும்பம் மூணுநாள்வெச்சு உபயோகப் படுத்தும் …இந்தியர்களுக்கு எதுவுமே impossible..இல்லை என்கிறார்
மா… தவம்…செய்திருக்கிறார் இதைப்படம் போல எடுக்காமல் தெய்வக் கைங்கர்யம் செய்வதுபோல செய்திருக்கிறார் வசனங்களில் ‘குறுவடு””நறுக்”
சிபிஐ அதிகாரி..” பொங்கலுக்கு பட்டாசு வெடிக்கறா மாதிரி சம்பந்த மில்லாமல் இவர் மேல்அபத்தமான வெத்துக்கேஸ் போட்டிருக்காங்க”
” பாகிஸ்தானுக்கு வித்ததா சொல்றவிஷயத்தை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை கண்டே பிடிக்காததை எப்படிவிக்கமுடியும் அவங்களுக்கு வித்ததாக சொல்ற ரகசியம் பிளாட்பாரத்துல 200₹ க்கு விக்கறபுஸ்தகத்துல இருக்கறதுதான்”
சூர்யா நம்பியைப்பார்த்து “செகண்ட்ஸோட அருமை உங்களுக் குத்தான் நல்லாதெரியும்”
” அது தன்மையா பெருந்தன்மை யான்னு நேரம்வரும்போதுதான் தெரியும்”
“விண்வெளிக்குப்போய்சேராத ராக்கெட் வெறும் பட்டாசுதான்’
க்ரையோஜினிக் இஞ்சின்டெண்டர் சுயம்வரத்துக்கு எல்லாநாட்டுராஜா வும் வந்தாங்க”
” ஒரு ராக்கெட் கவுந்தா என்ன பண்ணணும்ன்னு தெரிஞ்ச விஞ்ஞா னிக்கு ஒருமனுஷன்கவுந்தா என்ன செய்யணும்ன்னு தெரியலையே”
அபாரம் மாதவா அபாரம்!
இயக்குநர்மாதவனும்சாதாரண ஆள் இல்லை…கமலோடு பாலச்சந்தரோடு மணிரத்னத்தோடு இருந்ததன்….அனுபவமுதிர்ச்சியைப்பிழிந்திருக்கிறார்
“இப்பவே இதை சாராபாய்க்கிட்ட சொல்லுங்க”
இப்ப இந்திவுயால நடு ராத்திரி.. விடிஞ்சதும்சொல்றேன் என்று நம்பிசொல்லும்போது இந்தியாவில் விக்ரம்சாராபாய்தூக்கத்தில் திரும்பி படுக்கிறார்
சிம்ரனோடு மழையில் ஆஸ்பத்தி்ரி
வாசலில் ஆட்டோவிலிருந்து வெளியேதள்ளிவிடப் பட்டபோது எட்டுமுழவேட்டி அவிழ்ந்ததை தாறுமாறாய் கட்டிக்கொண்டு ஒவ் வொருவராய்உதவிகேட்பதா சிம்ரனை கவனிப்பதா சிதறி.. மழை யில் நனையும்மெடிக்கல் பேப்பர் களை சேகரிப்பதா என்று தவிக்கும் போது அவிழ்ந்தவேட்டியை கட்டிவிட நம்கைகளைத் தவிக்க வைக்கிறார்
இண்டர்வியூ முடிந்ததும் நம்பிதன்னுடைய பழைய ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்வது
பொதுமக்கள் தேசத்துரோகி என்று துளசிமாடத்தைக் கொளுத்தி விட்டுபோனபின் எரியும்துளசிமேல் கொண்டுவந்த தீர்த்ததைக்கொட்டி அணைப்பது
ஜமாய்ராஜா!
தொப்புள்காட்டாத ஒரேபடம் என்று பிதாமகனில் வஞ்சப்புகழப்பட்ட சிம்ரனா இது…ஜெயிலிலிருந்து வந்த மாதவனை..வெறித்தபடி பேஏஏஎன்று அலறும் அலறலில் இயலாமை…….. துயரம் வருத்தம் சித்தப்ரமை கலந்த பிளிறல் பயத்தை ஏற்படுத்துகிறது..
விண்வெளி பற்றிஹாலிவுட்டில் எடுக்கப்படும் சினிமாவுக்கு ஆகும் செலவில்பாதிதான் விகாஸ் இஞ்சின் தயாரிக்க ஆன செலவுஎன்கிறார் மாதவன்… க்ரேட் இந்திய விஞ்ஞானி
கள்
நம்பிநாராயணன் போல ஒரு ஆளுமையைநாம் சந்திக்க நேர்ந் தால் அவர் அருகில்சென்று குட்மார்னிங் சொல்லவே மனம் அச்சப்படும்அப்பேற்பட்டவர்க்கு எவ்வளவு கேவலமான அவமானங்கள்?
எல்லாம்சரிதான் எனக்கொரு கேள்வி
திருமணத்தில் சிம்ரனை அவமானப்படுத்தி,பஸ்ஸில் மாப்பிள்ளையை அவமானப்படுத்தி மகள்முகத்தில் சாணி அடித்து கோவில் குருக்கள் தீபாரதனையை தேசத்துரோகிக்கு காட்டாமல்சட்டென அணைக்கிறார் இவர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம் அதுவரை ஏன் நம்பிக்குத் தெரியாமல் மறுநாள் (பேப்பரில் எல்லாம்வந்தபிறகு) போலிஸ் கைது செய்யும்போதுதான் புரிகிறது?
நிஜநம்பிநாராயணன் சொல்கிறார்
” இந்தப்படத்தை என்மனைவியும் மகளும்பார்க்கவில்லை…பார்க்க விரும்பவும்இல்லை..அவர்கள் இன்னொருமுறை கடந்துபோன துன்ப வாழ்க்கையைவாழ விரும்பவில்லை”

One Comment on “ரா க் கெ ட் ரி நம்பி விளைவு வி ம ர் ச ன ம்/சப்தரிஷி லா.ச.ரா”

Comments are closed.