அவரவர் பாடு

எஸ்ஸார்சி


 தெரு நாயெல்லாம்
அசைவப்பிரியர்கள் வீட்டைச்சுற்றியபடி
வாலைக்குழைப்பதும் சலாம் போடுவதும்
அவர்கட்குத்தான்
நாயுக்குச் சோறு போட்டு
நன்றியுள்ளது நாயென்று
நவிலத்தான் விருப்பமெனக்கு
போடும் சோற்றைத்
தொட்டால்தானே அது
எதனைத்தான் போட்டாலும்
முகர்ந்து முகர்ந்து
நகர்ந்தே போகிறது. அது.
நாயின் கண்கள்
பேசுவது கேட்டேன்
’சோம்புமில்லை பட்டையுமில்லை
இன்னும் இதைத்தான் தின்கிறாய் நீ—–