ஆய்ந்து ஓய்ந்து
சோர்ந்த நேரத்தில்…
சற்றும் எதிர்பார்க்காத
சமயத்தில்…
பதின்ம வயது
மகள் தரும்
நிறம் மணம் சுவை
திடமில்லாத தேநீர்
மன ஆழம் வரை
தித்திப்பதும்,
அந்த சுவை
அருகிலில்லாத
அன்னையை
நினைவடுக்கில்
உணரச்செய்வதும் ஏன்?
ஆய்ந்து ஓய்ந்து
சோர்ந்த நேரத்தில்…
சற்றும் எதிர்பார்க்காத
சமயத்தில்…
பதின்ம வயது
மகள் தரும்
நிறம் மணம் சுவை
திடமில்லாத தேநீர்
மன ஆழம் வரை
தித்திப்பதும்,
அந்த சுவை
அருகிலில்லாத
அன்னையை
நினைவடுக்கில்
உணரச்செய்வதும் ஏன்?