
காதல் கவிதை
பாட வேண்டுமடி
கவிதை அரங்கினிலே
இனிய நண்பர்
மௌலியின்
அன்பு விண்ணப்பம் !
நீயே தென்றலாய்
என்னுள் கீதம்
இசைக்கயிலே
காதல் கவிதையிலே
ஏதடி ரசம் ?
மெல்லிய சலங்கை
ஒலி உன் வரவை
பறை சாற்றுதடி !
என் அருமை பைங்கிளியே !
உன் நினைவே
என்னுள் ரசவாதம்
புரியுதடி!
பவள வாய் நீ திறந்து
விளிக்கையிலே
கவிதை வெள்ளமாய்
மடை திறந்து வழியுதடி !
புத்தம் புது புனலாய்
நீயே எந்தன்
புதுக் கவிதை !
***********************************
21/07/2022

அருமை
ஒரு குழந்தையைப் பார்த்து சொல்வதாகவும் எடுத்துக்
கொள்ளலாம் .
நன்றாக இருக்கிறது