நாத்திகம் கேட்கத் தெய்வங்கள் வந்தன.
அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறன் குறித்த வைரமுத்துவின் பாடல் வரிகள் இவை. அண்ணா தன் பேச்சுத் திறத்தால் நாத்திகம் பேசி நேரில் வந்த கடவுளரைக் கூட தாம் பொய் என்று நம்ப வைக்கக் கூடியவர் என்ற பொருளில் அமைந்த பாடல் இது.
“ஆயதோர் காலையில்
ஆலய வீதியில்
நாயக னேஉன்
நாத்திகம் கேட்கத்
தெய்வங்க ளெல்லாம்
தேர்களில் வந்தன
பொய்தாம் தாமென
புலம்பிப் போயின.”
அருமை