
இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்து போய் பாhக்க
செத்துக்கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது.
ஆனால்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்
என்று மறுநாள்l
பாட்டி
கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருக்கிறது.”
நன்றி : அதிரன்
