சரோஜ் நாராயணசாமி/அழகியசிங்கர்

1977 ஆம் ஆண்டு பள்ளிக்கரணையில் உள்ள கிண்டி மெஷின் டூல்ஸ்ஸில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டிலிருந்து கிளம்பி சைக்கிளை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டில் பஸ் பிடித்துப் போவேன். அப்போது நான் கேட்பது செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயணசாமி என்ற குரல்.
அதேபோல் அலுவலகம் விட்டு வரும்போதும் அதே குரலைக் கேட்பேன்.
இன்று அந்தக் குரலுக்கு உரிய பெண்மணி இறந்து விட்டாரென்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன்.