16.10.2022
ஞாயிறு
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: சமீபத்தில் வண்ணநிலவன், ராஜேந்திர சோழனுக்கு விளக்கு விருது கிடைத்துள்ளதே?
அழகியசிங்கர் : வாழ்த்துகிறேன்.
ஜெகன் : நானும் வாழ்த்துகிறேன். அவர்கள் இருவருமே தகுதியானவர்கள்.
மோகினி : தகுதியானவர்களுக்கு விருது கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அழகியசிங்கர்:உண்மைதான்.
:
மோகினி : சமீபத்தில் குவிகம் வெளியிட்ட 6 புத்தகங்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
அழகியசிங்கர் : 6 புத்தகங்களில் 3 புத்தகங்கள் கவிதைத் தொகுதிகள். 'திரும்பி வந்தால் உனது' என்ற மதுவந்தி கவிதைத் தொகுதி, 'தோற்றுப்போவேனோ' என்ற காலவன் தொகுதி, 'தரிசனம்' என்ற சஞ்சயன் கவிதைத் தொகுதி.
ஜெகன் : இதைத் தவிர மூன்று உரைநடைப் புத்தகங்கள். ஹெச் என் ஹரிஹரனின் அப்பாவின் சைக்கிள் என்ற சிறுகதைத் தொகுப்பு, எஸ்.எல். நாணுவின் பாச்சாயணம், டாக்டர் ஜெ.பாஸ்கரனின் கடைசி பக்கம் என்ற கட்டுரைத் தொகுதி.
அழகியசிங்கர்: டாக்டர் புத்தகம் மட்டும் எழுதி விட்டேன். மற்றப் புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும்.
ஜெகன் இதைத் தவிர உங்களுக்குக் கிடைத்துள்ள வேறு புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும்.
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி : சமீபத்தில் நீங்கள் ரசித்த சிறுபத்திரிகை.
ஜெகன் : நான் ரசித்த சிறு பத்திரிகை 'வேட்கை'
மோகினி : நான் ரசித்தது டாக்டர் பாஸ்கரன் தயாரித்த 'பூபாளம்' இதழ்.
அழகியசிங்கர் : 'வேட்கை'யில் ஒரு சிறு பத்திரிகைக்கான எல்லா லட்சணமும் இருக்கிறது. ஆனால் பூபாளம் ஒரு பல்சுவை இதழாக எனக்குப் படுகிறது.
ஜெகன் : ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
அழகியசிங்கர் : முதலில் டாக்டர் தயாரித்த பூபாளம் இதழை நான் குறைவாக மதிப்பிட வில்லை. ஆனால் ஒரு சிறுபத்திரிக்கைக்கான கூறுகள் அந்தப் பத்திரிகையில் குறைவு. அதற்கு வெகுஜன இதழில் கூறுகளும், சிறுபத்திரிகைக்கான கூறுகளும் கலந்து இருக்கின்றன. வேட்கையில் அப்படி இல்லை.
மோகினி : உண்மையில் ஜெ பாஸ்கரன் தயாரித்த பூபாளம் மாதிரி பத்திரிகையைத் தயாரிக்க முடியாது.
அழகியசிங்கர் : நான் ஒப்புக்கொள்கிறேன்.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். எல்லோருக்கும் இரவு வணக்கம்.
(இரவு : 10.47)