டாக்டர் வள்ளுவர்/முருகுசுந்தரம் 

  1. தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது

ஒப்பிடமுடியாத உயர்ந்தவர் என நீங்கள் கருதும் ஒருவரின்
அறவாழ்வைப் பின்பற்றி அவரது வழிகாட்டுதல் படி
நடப்பதைத்தவிர, தீராத கவலைகளால் துயரப்படும் மனதைத் திசை
திருப்புதல் கடினம்.

உடலையும் மனத்தையும் பாதிக்கும் எல்லா நோய்களுக்கும்
அடிப்படைக் காரணம் மனக் கவலைகள் தான் என்பதை மருத்துவ
உளவியல் ஆய்வுகள் ஆணித்தரமாக உறுதி செய்கின்றன. மனக்
கவலைகளுக்கு மருந்தே இல்லை. மனக் கவலை நீக்க மனமே
மருந்து. கவலையுற்ற மனத்தை வேறு எண்ணங்களுக்குத் திசை
திருப்புவதே மனக்கவலை மாற்ற சிறந்த வழி. வாழ்வியல்
மருத்துவர் வள்ளுவப் பெருந்தகை இதற்கு ஒரு எளிய வழியைக்
காட்டுகிறார். அந்த எளிய வழி நம் மனதுக்குப் பிடித்த ஒப்பிட
முடியாத உயர்ந்தவரின் வாழ்வு நெறிகளைப் பின்பற்றுவது தான்.
அந்த ஒப்புவமை இல்லாதவர் நம் தாயாகவோ, தந்தையாகவோ,
ஆசிரியராகவோ, வாழ்க்கைத் துணையாகவோ அல்லது
இறைவனாகவோ இருக்கலாம் என்பது நான் அனுபஅவித்து
உணர்ந்த உண்மை. எனக்கு மனக்கவலைகள் ஏற்படும்
போதெல்லாம் என் இணை பிரியா மனையாளும், ஈடிணையற்ற என்
ஆசிரியப் பெருந்தகையுமே மருந்தாகிறார்கள்.
மருந்துகளே இல்லாத மனக்கவலை நோய்க்கு எளிய மருந்தொன்று
தருகிறார் மன நல மருத்துவ மாமேதை வள்ளுவப் பெருந்தகை.

SURRENDER TO THE ALMIGHTY…YOU ARE FREE FROM ANXIETY…

One Comment on “டாக்டர் வள்ளுவர்/முருகுசுந்தரம் ”

Comments are closed.