கலாவதி பாஸ்கரன்/வி.ஐ.பி

மக்கள் பணி புரியும்
மருத்துவர்
மாதங்கள் பல உழைத்து
எழுதிய ஒரு நூல்,
வெளியிட்டுப் பேசிய
வெள்ளித் திரை பிரபலம்,
மருத்துவரின் மேன்மைகளை
மயக்கும் சொல்லில் உரைத்து,
வானளவில் புகழ்ந்து,
அவர் தம் காலம் தாழ்த்தாது
பணியாற்றும் திறன் வியந்து,
கடைசியில் புத்தகம் பற்றி
நறுக் என கூறிய
நான்கு வார்த்தைகள்
“ நான் இன்னும் புத்தகம் படிக்கவில்லை!”

3 Comments on “கலாவதி பாஸ்கரன்/வி.ஐ.பி”

Comments are closed.