
1
வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்..
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை…. -12
இது சாதாரணமாக…திருக்குறள் தெரியுமா? எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..
இது என்ன ஒரே துப்பாக்கி ..என்கிறீர்களா?
அந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..
இன்று பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்…என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..
மழை…மக்களுக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.
அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.
இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை…நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.
இனி….மேற் சொன்ன குறளுக்கான உரை-
மக்களுக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.
(பின் குறிப்பு- இது அக்குறள் கூறும் பொருள். இதை ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள் கொண்டு நோக்க வேண்டாம் )
டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9 – விருட்சம் நாளிதழ்

One Comment on “டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 10”
Comments are closed.