ஆர்க்கே!/போச்சு.. எல்லாம் போச்சு..!


அந்த கபடமில்லாச் சிரிப்பு போச்சு.!
அந்த களங்கமில்லா மனசு போச்சு.!
அந்த குறைகாண முடியா குணம் போச்சு..!
அந்த உற்சாக வார்த்தை ஊற்று போச்சு..!
அந்த மனதார பாராட்டும் வாய் போச்சு..!

அந்த மித்ரச் சண்டை போச்சு..!
அந்த ஆழ்மனத்து ஆறுதல் போச்சு..!
அந்த அற்புத கவிதைச்சோலை போச்சு..!
அந்த உடுக்கையிழப்பு இடுக்கண் களை நட்பு போச்சு..!
அந்த வாடா போடா நட்பின் வாடாமலர் போச்சு..!
என் தோள் அரவணைத்த அந்தக் கரம் போச்சு..!

“எல்லாம் சரியாய்டும்டா! நீ எப்பவும் இப்படி
சிரிச்சிண்டே இருடா!”ம்பான் என்னிடம்.

இப்ப என்னடான்னா
தொண்டை வரள வரள
என்னைத் தனிமையிலிப்படி
கதற விட்டு விட்டு…

ஒன்றுமே சொல்லாமல்
சொடக்கு போடும் நேரத்தில்
அந்த இரக்கமில்லா
காலனுக்குப் போய்
கவிதை சொல்ல
என்னடா அவசரம்!
என்னடா அவசரம்!

என் ஆருயிர் “சகா”தேவன்
என்னை அரை உயிர் ஆக்கி விட்டு
வானுலக நோக்கி பறந்து சென்றானே!!

மதுவந்தி வீர ராகவா..!

டேய்! டேய்! டேய்!டேய்!
போகிற வயசாடா இது..?
நான் தாங்குகிற
வலி அளவாடா இது ..?

One Comment on “ஆர்க்கே!/போச்சு.. எல்லாம் போச்சு..!”

Comments are closed.