19.03.2022 சனிக்கிழமை நடந்த கதைஞர்கள் கூட்டம் சிறப்பான கூட்டமாக இருந்தது.
முதல் கூட்டம் குந்தவை என்ற ஈஓஓழப் பெண்மணியின் கதைகள் கூட்டம்.
60 களில் எழுத ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தவர். ‘யோகம் இருக்கிறது’ ஸ்ரீ அவரது கதைத் தொகுப்பை மித்ர வெளியீடாக 2002 ஆம் ஆண்டு மூத்த ஈழ எழுத்தாளர் எஸ்.பொ கொண்டு வந்துள்ளார். மேலும் எழுத்தாளர் குந்தவை பற்றி விபரம் தெரியவில்லை.
இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.
கலந்துகொண்ட 6 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தி உள்ளார்கள். அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.