யோகி – இன்றொரு சேதி/விசிறி சங்கர்


O
சன்னதித் தெரு இல்லத்தில் லீ லோஸோவிக் கவிதைத் தொகுதி முன்னுரையை யோகி திருமுன்பு வாசித்த போது, பாடல் வரிக்கேற்ப
நடந்தது என்ன ?
O
யோகியின் அமெரிக்க பக்தர் மறைந்த திரு லீ லோஸோவிக் அவர்கள் சிறந்த கவிஞர். அவர் யோகியின் மீது ஏராளம் கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
O
லீயின் யோகி கவிதை புத்தக முன்னுரையை யோகி நண்பர்கள் கேட்கட்டும் என்று வாசிக்கச் செய்தார்.
O
அதில், யோகி கந்தலாடையைக் கூட
ஒரு ராஜாவை விடக் கம்பீரமாக அணிந்துள்ளார்.. என்ற வரிகளை வாசித்த போது, யோகியை தரிசிக்க வந்த ஒரு சிறுவன் யோகியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். யோகி அந்தச் சிறுவனிடம், உங்கள் பெயர் என்ன ? என்று வினவினார்.
O
அந்த சிறுவன் பதில் சொன்னானன் ” ராஜா ” என்று.
O
யோகி அட்டகாசமாக சிரித்து ” ஓ ராஜா இந்தப் பிச்சைக்காரனை பார்க்க வந்திருக்கிறார் ” என்றார்
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா