‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’/வண்ணதாசன்

‘‘இதையே 15 வருஷத்திற்கு முன்னாடி கேட்டால் ‘ஆமாம்’னு சொல்லியிருப்பேன். இப்ப ‘எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி சந்திரா வேலைக்குப் போய் நல்லா சம்பாதிக்கிறாங்க. ஒண்ணுக்கு இரண்டு அபார்ட்மென்ட் இருக்கு. ஆனால் அவனோட ‘பாம்புப் பிடாரன்’ எந்த புத்துக்குள்ள போனான்? ‘கம்பா நதி’ சங்கரம் பிள்ளை எங்கே போனாருன்னு தெரியலை. பழைய வண்ணநிலவனை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு.

அதுக்கு நேர் எதிரடியாக அப்ப இருந்ததைவிட இப்ப என் சமீபத்திய கதைகள் அமைஞ்சிட்டு இருக்கு. ரொம்ப சீராகவும், சரியாகவும் இருக்கு. நெருக்கடியும், கண்ணீரும், அழுத்தமும் சேர்ந்து ஒரு கலைஞனுக்கு நல்லுறவாக இல்ல, வல்லுறவாக இருக்கு. என்னை ஆறடி உயரத்தில், அழகா சிரிக்கிற படங்களா பார்த்துப் போடுகிறார்கள். உலகின் ஆராதிக்கப்பட்ட மனுஷன்னு நினைக்கிறாங்க.

ஆனால் அப்படிக் கிடையாது. நான் மனிதர்களை குறைத்து மதிப்பிட்டதே கிடையாது. எப்படியிருந்தாலும் என்னுடைய புகார் புத்தகத்தில் வாழ்வு குறித்த முதல் வரியை நான் எழுதவே மாட்டேன். அதிகாரியாக ஒரு பைசா கையூட்டு நான் வாங்கினதில்லை. அதிகபட்ச நேர்மை, உண்மைன்னு இருந்திருக்கேன். முகநூலில் கடந்த நாலைந்து நாட்களாக வாழ்த்தாக பதிவிடுகிறார்கள். யார் யாருன்னே தெரியலை. இவ்வளவு பேரை இந்த எழுத்தின் மூலம் அடைஞ்சிருக்கேன்!’’

வண்ணதாசன் பேட்டி
நன்றி: குங்குமம்

முகநூலில் : ஆர்.கந்தசாமி

One Comment on “‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’/வண்ணதாசன்”

Comments are closed.