எஸ்ஸார்சி/மண்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை

மானுடம் நேசித்த
மாண்பின் உச்சி.
ஆப்பிரிக்க மண்ணில்
மகாத்மா காந்தி யோடு
போராடிப்புகழ்ச்சேர்த்த
பிஞ்சு தமிழ்ப்பெண்
வள்ளியம்மை வந்துதித்த
புனித மண்.
தொடு வணங்கு
சற்று அகந்தை
இறுக்கம் தவிர்க்கட்டும்
தில்லையாடி
எல்லையாடி
வருவோம் வாயேன்.

எஸ்ஸார்சி/காலம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/மண்”

Comments are closed.