
18/7/2025 அன்று வாசித்த ஏழாவது கவிதை
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
வாழ் வென்னும் தத்துவத்தின் வித்தாம்
பொதுவுடைமைச் சாத்திரத்தின் சின்னமாம்
செங்கொடி தொட்டதால்
ஒட்டிய ஞானம் கடுகெனினும்
சும்மா விடாது தான்
சுருங்கிப் போதல்
எப்படிச் சாத்தியம்
வெந்ததைத்தின்று விதி
வந்தால் போகலாம்
வேறெதுவும் வேண்டாம்
முடிவெடு மோது நீ
சொத்தை மொழி
சொன்னவனை.
கொள்கை எலாம் அப்புறமாய்.

One Comment on “எஸ்ஸார்சி/பொது உடைமை”
Comments are closed.