தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்


சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்.
தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத் தூரிகை;
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை!
தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – சிறை – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
https://daily.navinavirutcham.in/?p=2915
