மதுவந்தி/சுதந்திரம்

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 6 ஆம் கவிதை.

கூண்டின் கதவு திறக்கப்பட்டு
கிளி வெளியே வர,பின்

அடைத்த அறைக்கதவு
திறக்கப்பட, பின்

நடைபாதைத் தடுப்பும்
விலக்கி வைக்கப்பட,பின்

கப்பலின் மேல்தளத்தில்
வந்து நின்றால்,

கீழே ஆழ்கடல்,
மேலே விரிவானம்.

விட்டு விடுதலையாவது எப்படி?

மதுவந்தி/விருந்து – விருட்சம் நாளிதழ்

One Comment on “மதுவந்தி/சுதந்திரம்”

Comments are closed.