அர்ஜுனன்/பாதுகாப்பு 

நவராத்திரி விழா வரும் சமயமென்பதால், கடவுள் உருவ பொம்மை விற்பனை செய்யக் கிளம்பினாள் பொம்மி. தலைச்சுமை போக, இடுப்புச் சுமையாகக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினாள். “பொம்மையை விட நீ அழகா இருக்கே. தனியா ஊர் முழுசும் சுத்துற, காலம் கெட்டுக் கிடக்கு. கவனமா இரு.”  பக்கத்து வீட்டுக் கோமதி பாட்டி சொன்னதில் கரிசனமும், கவலையும் தெரிந்தன. “நான் எங்க தனியா இருக்கேன்? இடுப்புல இருக்கிற …

>>

 தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/சங்கு

     சரஸ்வதி பூஜை நெருங்குதேன்னு  பொம்மை வாங்க மயிலை மாடவீதியில் நடக்க ஆரம்பித்தேன். சிவப்பு வெளுப்பு சங்கு வளையல்கள் அணிந்த வங்க அழகி ஒருத்தி  கடவுளர்களை விற்றுக் கொண்டிருந்தாள். பக்கத்துக் கடைகளில் விற்பதைக் காட்டிலும் தரையில் விற்கும் அவளிடம் ஒவ்வொரு பொம்மையும் …

>>

கமலா முரளி  /தத்ரூபம்

சிவப்பு நிற க்ரேட்டா கார் அந்த பிரம்மாண்ட அரங்கத்தின் வாசலில் வந்து நின்றது. முக்கா பேண்ட், சிவப்பு மெகா ஸ்லீவ் டீ ஷர்ட் அணிந்திருந்த நவ்யா கீழே இறங்கினாள். கத்தரிக்கப்பட்ட முடியைத்  தூக்கிச் செருகி ஒரு க்ளிப் போட்டிருந்தாள். ‘க்ளக்,க்ளக்’ என …

>>

பி.ஆர். கிரிஜா/நம்பிக்கை

ஏ ஐ தொழில் நுட்பம் கொண்டு வரைந்த படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ். ரம்பை, ஊர்வசியை சினிமாவில் மட்டுமே பார்த்ததுண்டு. இப்போது விதம் விதமாக ரம்பைகளை உருவாக்கலாம். அந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த மூன்று வயது பெண் குழந்தை தெய்வாம்சம் பொருந்தி இருந்தது. இத்தனை மண் பொம்மைகளையும், ஒரு பெண் குழந்தையும் எப்படி இவளால் சுமக்க முடியும்?           தேவலோகத்திலிருந்து பார்வதி தேவியே மண்ணுலகத்திற்கு இறங்கி  வந்து விட்டாளோ! சினிமா டைரக்டரான ரமேஷிற்கு ஒரு ஐடியா தோன்றியது. இதே மாதிரி பல  படங்களை ஏ ஐ தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கி ஒரு அனிமேஷன் படம் தயாரித்தால் சூப்பர் டூப்பர் சக்சஸ் ஆக வாய்ப்பு அதிகம். அவன் அப்பாவே சினிமா டைரக்டர் ஆனதால் பணப்  புழக்கம் அதிகம். உடனே தன்னுடைய கோ டைரக்டரை அழைத்து பேச முடிவு செய்தான்.    “சிவா, நான்தான் ரமேஷ் பேசறேன். வாட்ஸ்அப்ல உனக்கு ஒரு படம் அனுப்பறேன். இதைப் பற்றி உன்னோடு டிஸ்கஸ் பண்ணனும். இன்னிக்கு  மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வா” என்றான். ” ஷூவர் டா, ஐ வில் கம்” என்றான் சிவா. இந்தப் படம் எடுத்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று, தானும் தன் அப்பா மாதிரி ஒரு பெரிய  கோடீஸ்வரன் ஆகும் கற்பனையில் தன் காதலி மாலினியைப் பார்க்க ராயல் என்ஃபீல்ட்  புல் லட்டில் பறந்தான் ரமேஷ். 152

>>

  பார்வதி /வெட்டிப் பசங்க

கஸ்தூரிக்கு மேலெல்லாம் வலித்தது. இந்த வலியோடு பாரம் சுமக்கணும் என்ற நினைப்பே கசப்பாக இருந்தது. வலியைப் பார்த்தால்  குழந்தையின் வயிற்றை நிரப்பமுடியாது என்று நினைத்தவள்,  வலியைப் பொறுத்துக் கொண்டு,  பொம்மைக் கூடையைத் தலைக்கேற்றினாள். “பொம்மை வாங்கலியோ பொம்மை”   கூவிக்கொண்டே வந்தாள். தலையில் …

>>