8. கடிதமும் பதிலும்/செல்லம்மாள் பாரதி
பாரதியார் காசியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருசமயம் ஸ்ரீ விசுவநாத சிவன் (எனது தமக்கை புருஷர்) கடையம் வந்தார். அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஒருநாள் என்னைத் தனியாக அழைத்து, “அம்மா! நீ எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தாங்குவதற்கு உன் மனதைத் தயார் செய்து
>>