தடங்கள்/ இராஜா மணி
மனைவியின் நினைவா, மகனின் படிப்பா மகளின் திருமணமா அடுத்த வேளை உணவா வாழ்வின் மீது காதலா..எதோ ஒன்று உந்திந்தள்ள சுவடுகள் அற்ற பாதையில்அவர் மிதித்துச் சென்ற சைக்கிளின் தடங்கள் பாதையாகிபின்சாலையானது. ஆனாலும் பயணங்கள் எளிதாக இல்லை.
>>மனைவியின் நினைவா, மகனின் படிப்பா மகளின் திருமணமா அடுத்த வேளை உணவா வாழ்வின் மீது காதலா..எதோ ஒன்று உந்திந்தள்ள சுவடுகள் அற்ற பாதையில்அவர் மிதித்துச் சென்ற சைக்கிளின் தடங்கள் பாதையாகிபின்சாலையானது. ஆனாலும் பயணங்கள் எளிதாக இல்லை.
>>கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் கொடைச் சிறப்பை விளக்கும் முடமோசியார் என்பவரின் புறநானூற்றுப் பாடல்.
>>காலையில் தோட்டத்துச் சுற்றுச்சுவர் மீது காக்கைக்குச் சோறு வைத்தேன். வழக்கம்போல். “கா, கா” எனக் குரல் கொடுத்தேன். நாள்தோறும்
>>உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
ஏன் என்று கேட்டேன்
ஏன் என்று கேட்டான்
பென்சில் கிடைக்காமல்
பேனாதான்
தூரிகையானது..
திருத்தமுடியாது
மலர் ஒன்று தன்னகத்தே
தனது சுகந்தத்தை
வைத்திருப்பதுபோல்
ஓ உலகே, உன்னை
அந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடியாலான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த
>>ஈருருளை இவனின் ஒவ்வோர் உருளலும்…
எனக்கோர் பருக்கையாகிப் பசியாற்றும்…
அவரது வாகனம்
அவரது பாதை
அவரது பயணம் அது
அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர். இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.
பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப் பற்றி எழுத்தாளர் இந்துமதியைப் பற்றியது.
வெளிப்பக்கமுள்ள மாடிப்படியின் கீழுள்ள
குறுகலான இடத்தில் மரஸ்டூலில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டன
அவ்வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
தென்படவில்லை
அவர் அமர்ந்திருந்த ஸ்டூல் வாசலோரமாக வைக்கப்பட்டுள்ளது
வயோதிகரென எண்ணத் தகுந்தவரல்ல
மூக்கின் கீழ்வளைவில் பொருந்திய கண்ணாடி
கொஞ்சம் கீழ்வெட்டுப் பார்வை
தன்னைக் கடப்பவர்களுக்கெல்லாம்
ஒரு விஷமச் சிரிப்பு
அவர் எழுந்து நின்றதை பார்த்ததில்லை
ஆனால் யாரையும் மிரட்டாத வாளிப்பு
அந்த மாடியின் கீழுள்ள இடுக்கு
ஏழு அடி நீளமும் நான்கடி அகலம் இருக்கலாம்
அங்கு காலை பத்துமுதல் மாலை ஆறு மணிவரை
வாரத்தின் ஆறுநாளும் அமர்ந்திருப்பார்
எதையோ செய்து கொண்டிருந்தார்
அவரிருந்த மாடிப்படியின் இடப்பக்கம்
ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்பு பகுதியின்
முன்கதவு திறந்திருந்தது
தெருவிலிருந்து இரண்டு படிகள் ஏறிச்சென்று
ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தவரை
மாடியின் கீழிருந்தவர் இல்லையா என்றேன்
அவர் இடத்தை காலிசெய்துவிட்டார் என்றவர்
ஏன் அவரது புதிய முகவரி வேண்டுமா
உங்களுக்கு ஏதாவது தரவேண்டுமா எனக் கேட்டார்
ஒன்றுமில்லை என்றேன்
பலர் அவர் எங்கே எனக் கேட்கின்றனர்
நீங்கள் எதையாவது அவரிடம் தந்தீர்களா என்றதும்
அப்படியெல்லாம் இல்லை
சரி உங்கள் பெயர் பெயர் என்றவரிடம்
தயங்கியபடியே கண்சிமிட்டிவிட்டு விடைபெறுகையில்
அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தவரின் பெயரைக் கேட்காமல் மீண்டேன் .
-எஸ்.சண்முகம் –
(எண்: 055)