கணேஷ்ராம்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 1ஆசிரியர்: அழகிய சிங்கர்

பாட்டுடைத் தலைவனான அழகிய சிங்கர் பற்றி அரை நாள் பேசலாம். அரைமணி நேரத்தில் பேசுவது கஷ்டம். அரை நாழிகை என்பது அநியாயம்.முன்னுரையோடு முடிந்து விடுவதில்லை முன் ஜென்மத்தில் இருந்து எழுதிக் கொண்டு இருப்பவரின் இலக்கிய வாழ்வு.அழகிய சிங்கர் அநியாயத்திற்கு அழகாகத் தலைப்புகள் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/அசோகமித்திரன் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 2025 / நூல் விமர்சனம்

ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவாக விருட்சம் ஆசிரியர் திரு. அழகியசிங்கர் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இருபத்தி மூன்று கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்து சிறப்பு செய்த விஐபி-களில் அசோகமித்திரன் அவர்களது இரண்டு மகன்களையும் …

>>

அழகியசிங்கர்/துளி 224

19.10.2025 இன்று காலைதான் சீதை ஜோசியம் என்ற நாடகத்தைப் படித்து முடித்தேன். நார்லா வேங்கடேசுவர ராவ் என்ற தெலுங்கு எழுத்தாளர் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றவர். இந்த நாடகம் சற்று வித்தியாசமான பார்வை கொண்டு எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் முன்னர் இந்தியாவிற்கு …

>>

நாகேந்திர பாரதி/நவீன விருட்சம் ‘ 130 ‘

அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 130 ‘ ஆவது இதழ். அசோகமித்திரன் நினவுப் பரிசு முதல் மூன்று பரிசு பெற்ற கதைகளோடு சிறப்புக் கதைகள் சிலவற்றையும் சேர்த்து, மற்றும், கவிதை, கட்டுரைகளோடு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு அழகியசிங்கரின் பேத்தி ஆரபி …

>>

ஜெ.பாஸ்கரன்/என் சுயசரிதை – பம்மல் சம்பந்தம் (சந்தியா பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2016)

புத்தக அறிமுகம் 22 நாடகப் பேராசியர் பம்மல் சம்பந்தம் (முதலியார் என்ற சாதிப்பெயரைத் தவிர்த்து, தன் பெயரை எழுதுவதே அவரது வழக்கம்) அவர்களின் சுயசரிதை, “என் சுயசரிதை”. ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் தன் நாடகத் தொடர்பான எல்லா விபரங்களையும் எழுதிவிடதால், …

>>

ஜெ.பாஸ்கரன்/குவிதம் குறும்புதினம் (ஜூலை 2025) மூன்று குறு நாவல்கள்!

புத்தக அறிமுகம்: 21: “பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும்’ புத்ர’, ‘அபிதா’ இரண்டும் என்னை உறிஞ்சி விட்டன” – லா ச ரா. அவரது ‘விரும்பி வாசிக்கப்பட்ட’ கதைகளில் ஒன்று!புற்றுக்கு பால் வார்த்து, வேண்டிப் பெற்ற …

>>

கணேஷ்ராம்/சாயாவனம் (1968) by சா கந்தசாமி

சாயாவனம் நாவலைப் படித்து முடிக்க மூன்று நாட்கள் ஆகியிருக்கின்றன.மூன்று கட்டங்கள் கொண்ட விமானப் பயணத்தின் கடைசிக்கு முந்தைய ஆனால் சற்றே நீண்டதாக இருந்த கட்டத்தில் அருகில் அமர்ந்து இருந்த வெள்ளைக்காரன் நேர்த்தியான உடைகள் அணிந்து இருந்தான். என்னை விட நிச்சயமாக வயது …

>>

அழகியசிங்கர்/புத்தகம்..புத்தகம்..புத்தகம்

சமீபத்தில் நான் படித்த புத்தகம் காகித மாளிகை என்ற முப்பாள ரங்கநாயகம்மவின் நாவல். இதைத் தற்செயலாக படிக்க நேர்ந்தது. என் நூல் நிலையத்தில் எதிர்பாராத விதமாய் கரையான் வந்து சில புத்தகங்களை நாசம் செய்து விட்டது. அந்தத் தருணத்தில் புத்தகங்களை மாற்றி …

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 16

“விருட்சம் பரிசு பெற்ற கதைகள் 2024” மாதா மாதம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளிலிருந்து, ஒரு கதையைத் தேர்வு செய்து, (ஒரு வருடத்தில் 12 கதைகள்) அதனை ஒரு தொகுப்பாகக் கொண்டு வருவதை விருட்சம் ஆசிரியர் அழகியசிங்கர் செய்து வந்தார். கடந்த சில …

>>

ஜெய்சக்திவேல் தங்கவேல்/ மாணிக்கப் பரல்கள் – 87

அழகியசிங்கரின் “அப்பாவின் அறை” சிறுகதைத் தொகுப்பு, அவரது எழுத்துலகப் பயணத்தின் முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்துள்ள இந்தத் தொகுப்பு, அழகியசிங்கரின் அடையாளத்தை, வாசகர்களுக்கு உணர்த்துகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், அழகியசிங்கரின் தனித்துவமான கதை சொல்லும் பாணியையும், அவரது …

>>

அழகியசிங்கர்/நீங்களும் படிக்கலாம்… 26

கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுவது எளிதானதா? இப்போதெல்லாம் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஒரு புத்தகத்தின் கால் பகுதியைப் படித்தவுடன், அப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க எனக்கு எண்ணம் தோன்றாது. மேலும் அப் புத்தகம் என் அருகில் இல்லாமல் எங்காவது …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 5

எல்.ரகோத்தமனின் ஊஞ்சலின் தனிமை என்ற நான்காவது கவிதைத்தொகுதி , உள்முகத் தன்மை கொண்ட கவிதைத் தொகுதி.கவிதைகளை எழுதுவதில் வல்லவர் ரகோத்தமன்.இவர் கவிதைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன.112 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 140உதயகண்ணன் வெளியீடாக வந்துள்ளது.

>>

புத்தகம் அறிமுகம் 4/அழகியசிங்கர்

குறைந்தபட்சம் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதுதான் என் நோக்கம்.என்னை மதித்துப் புத்தகம் அளிப்வருக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.இரா.ம.சௌந்தர் புத்தகமான வேலிகள் தாண்டுவதற்கு அல்ல..என்ற புத்தகம் எப்படிக் கிடைத்தது என்று சொல்கிறேன்.புத்தகக் காட்சியில் 675 வது ஸ்டாலில் உட்கார்ந்திருக்கும் போது என் நண்பர் சந்தியா …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் – 3

உஷாதீபன் எழுதிய ‘தி.ஜானகிராமன் என்னும் ஆளுமை’ என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தி. ஜானகிராமன் எழுதிய 20 கதைகளை எடுத்துக் கொண்டு 20 கட்டுரைகள் எழுதி உள்ளார் உஷாதீபன். JAIRIGI பதிப்பகம் விலை ₹ 150.

>>

அழகியசிங்கர்/புத்தக அறிமுகம் 2

ஹெச்.என்.ஹரிஹரன் சிறுகதைத் தொகுப்பு கல்லடிப் பாலம் (கல்லடிப் பாலம் – சிறுகதைத் தொகுப்பு ₹ 120/– 16 சிறு கதைகள் கொண்ட புத்தகம் புத்தகக் காட்சியில் அரங்கம் 675 ல் கிடைக்கும். சிறுகதைத் தலைப்புகளை இங்கே வரிசைப் படுத்த விரும்புகிறேன். 1.கல்லடிப் …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 1

காலவன் (ஆர்க்கே)/ஜன்னல் மரம் (கவிதை திறந்தது கதவு என்ற ஆர்.கே.இராமநாதனின் கவிதைத் தொகுதி நேற்று வெளியிட்டார்கள்.அதிலிருந்து ஒரு கவிதையை இங்குக் குறிப்பிட்டுள்ளேன். இந்தக் கவிதைப் புத்தகம் புத்தகக் காட்சியில் அரங்கம் 675 ல் கிடைக்கும். விலை ₹ 150) பரபரவென்றுஅணில்இங்குமங்கும் ஓடுகிறது. …

>>

ஜெ.பாஸ்கரன்/மெளனப் பிள்ளையார் – சாவி (விருட்சம் வெளியீடு 2024)

புத்தக அறிமுகம் 11. “இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில “மெளனப் பிள்ளையார்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் …

>>

ஜெ.பாஸ்கரன்./கடைசி குரு (தீபன் – புஸ்தகா பப்ளிஷிங்)

புத்தக அறிமுகம் – 10 மகாபாரதத்தில் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் மகாபாரதம் பற்றிப் பேசுகின்றன. கட்டுடைக்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று கூறி மகாபாரதத்தை சிதைக்கும் புத்தகங்களும் உண்டு! மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் உண்டு என்பதால், …

>>

அழகியசிங்கர்/தூப்புக்காரி – நாவல் – மலர்விழி

தூப்புக்காரி – நாவல் – மலர்விழி – பக்கம் : 136 – வெளியீடு : அனலகம், தண்ணீர் பந்தல், கருங்கல் 629 157 குமரி மாவட்டம் – விலை ரூ.75/- கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு …

>>

மூன்று புத்தகங்கள்…/அழகியசிங்கர்

சிறுவாணி சிறுகதைகள் 2020 என்ற புத்தகம் சிறுவாணி வாசகர் மையம் – ரா.கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி 2020 என்ற பெயரில் 15 கதைகளை எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்., பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜெ.பாஸ்கரன் அலுப்பில்லாமல் இம்மாதிரியான

>>

நீங்களும் படிக்கலாம்… 26/அழகியசிங்கர்

அவர் மந்திரங்களை நம்புபவர். பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற எல்லாவற்றுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்பவர் அவர். எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை இல்லை . நான் தந்திரத்தை நம்புவன். தந்திரம் என்றால் உபாயம். இவர் மந்திரவாதி. நானோ

>>

புத்தக விமர்சனம் 8 – எங்கதெ/அழகியசிங்கர்

நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். அதேபோல்

>>

புத்தக விமர்சனம் 7 – ‘இந்தியா 1948’/அழகியசிங்கர்

நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன். வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன். மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன். பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும்.

>>

இமையம் எழுதிய வாழ்க வாழ்க…./அழகியசிங்கர் 

ஆண்டாளின் பெண் வளர்மதி. அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள்.
“காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது” என்கிறாள் வளர்மதி.

>>

குட்டி இளவரசன்/அந்த்வர்ன் து செந்த் எக்சுபெரி/ரமேஷ் கண்ணன்

மனிதர்களில் பலவகையானவரைக் குட்டி இளவரசன் சந்திக்கிறான்.அவனுக்கும் அவர்களுக்குமான உரையாடல் வழி மனித வாழ்வைப் பகடி செய்கிறான்.அதில் ஏதோவொரு இடத்தில் நம்மைச்

>>

நகுலனின் டயரி என்ற நாவலை முன் வைத்து../அழகியசிங்கர்

இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த

>>

தாவோ தே ஜிங் 1/அழகியசிங்கர்

வழக்கம்போல சூமில் நாங்கள் மூவரும் சந்தித்தோம்.
மோகினி, ஜெகன் : காலை வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : இந்தக் கொரோனா காலத்தில் நாம் சந்திக்க முடியாது போலிருக்கே?

>>

சீனு ராமசாமியின் மாயப் பூனை/நிஜந்தன்

திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமியின் ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ பதுங்குகிறது. பாய்கிறது. வாய் பிளந்து கோபம் காட்டுகிறது. தரையில் உடல் உரசி வாழ்வின் சோம்பல் முறிக்கிறது. இருப்பின் துயரையும் அவலத்தையும் கண் மூலம் ஒளியேற்றிக் கருத்தேற்றுகிறது.

>>

தென்னாப்பிரிக்காவில் காந்தி நூல் அறிமுகம் /எஸ்ஸார்சி

‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ இந்த நூலின் ஆசிரியர் ராமச்சந்திர குஹா.வரலாற்றாளார். எழுத்தாளர். 1958 ல் டெஹ்ராதூனில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வாழ்பவர். ஸ்டான்ஃபோர்ட் ஓஸ்லோ யேல் பல்கலைக்கழகங்களில்

>>

மணல் – குறுநாவல். அசோகமித்திரன்/ஜெ.பாஸ்கரன்

கணையாழியில் தொடராக 7 மாதங்கள் வெளிவந்த குறுநாவல் ‘மணல்’. அசோகமித்திரனின் எளிமையான ஆனால் வலிமையான எழுத்துக்களில், மிகவும் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், சம்பவங்களும் நிறைந்த குறுநாவல். கைக்கும் வாய்க்கும் பற்றாத ஏழ்மையான பிராமணக் குடும்பம், அதன் ஏழ்மையின் நிர்பந்தங்கள், அபிலாக்‌ஷைகள், ஒண்டுக்குடித்தனத்தில் உழலும் நிதர்சனங்கள், ஆண் பெண் மனச்சிக்கல்கள்

>>

நவீன விருட்சம் 121 ஒரு பார்வை /எஸ்ஸார்சி

நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்ட

>>

இதய நாதம் – ந.சிதம்பர சுப்ரமணியம்/உஷாதீபன்

நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய

>>

மூன்று மாதம் கடுங்காவல் – கல்கி/பிரபு மயிலாடுதுறை

இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் விருப்பமின்றி இந்தியாவை யுத்தத்துக்குள் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்யம். இந்தியர்களின் மீது திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தை மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்

>>

குவிகம் கடைசி பக்கம் – பாகம் 2 – Dr பாஸ்கரன்/இந்திரநீலன் சுரேஷ்

சுருக்கமாகச் சொன்னால் கதையை, ‘கட்டுரை’ போல எழுத முடியாது. கட்டுரையில் வெறும் ‘கதை’ விட முடியாது. Data, தரவுகள் முக்கியம். அதேசமயம் கொஞ்சம் கதையும் சேர்க்காவிட்டால் சோபிக்காது. அளவாக நகைச்சுவையையும் தூவ வேண்டும். சுஜாதா சொல்லுவார் அல்லவா , நகைச்சுவை என்பது ‘பாலேடு’ போன்று இருக்க வேண்டும் என்று ;

>>

புத்தகம் அறிமுகம்…1/அழகியசிங்கர்

23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது. அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன். ‘சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.

>>

புத்தக விமர்சனம் 8 – எங்கதெ/அழகியசிங்கர்

இமையம் அவர்களின் ‘எங்கதெ’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். 110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த

>>

இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை/அழகியசிங்கர்

அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர். இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.
பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப் பற்றி எழுத்தாளர் இந்துமதியைப் பற்றியது.

>>

“கவிதையும் காலமும்”/அதங்கோடுஅனிஷ்குமார்

காலமாற்றத்தால் நம்மோடு புழங்கிய நாற்காலி, வாழ்வின் வளர்சிதை மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்த நாற்காலி இன்று ஏலக்கடையில் என மெல்லிய அதிர்வோடு கவிதை முடியும்போது ஒரு மெல்லிய வலி கவிஞர் உள்ளத்தைத் தாக்குவதை உணர முடிகிறது.நாற்காலியின் இடமாற்றம்’பழையன கழிதல்’என

>>

விட்டல் ராவின் ’நில நடுக்கோடு’ /  எஸ்ஸார்சி                                                 

கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர் விட்டல் ராவ். தமிழில் பத்து புதினங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். சிறுகதைத்தொகுப்பு கட்டுரை  நூல்

>>

பசித்த மானிடம் – நாவல்- கரிச்சான் குஞ்சு – ஒரு பார்வை- பொன். குமார்

சீடனாக இருந்து படைத்தவர்களும் உண்டு. பாரதிக்கு தாசனாக பாரதி தாசனும் பாரதி தாசனுக்கு தாசனாக சுப்ப ரத்தின

>>

வாழ்த்துரை/ஸ்ரீநிவாச ராகவன் S

ஆளுமையின் கதை இது. மிளகு ராணி நமது அரசியலிலும், சமூகத்திலும் சரித்திரத்திலும் எப்படி மறைக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. அந்தச் சரிதததை வெளிக்கொண்டு வந்ததற்காக நாம் இரா முருகனுக்கு மிகப் பெரிய

>>

சுமார் 82 பக்கங்களே கொண்ட புத்தகம்! /முரளி சீத்தாராமன்

அந்த டாக்டர் ஒரு எச்சரிக்கை செய்தார்:- “இனி ஒரு முறை கூட நீ செஸ் விளையாடவே கூடாது! உனது மூளை தாங்காது! மறுபடி மயங்கி விழுந்தால் காப்பாற்றுவது கடினம்!”

>>

ஜனார்த்தனன் கே பி/யுத்தத்தோடு ஒரு யுத்தம்

அயல்நாடுகளில் டூர் சென்று திரும்பிய அந்த பிரபல எழுத்தாளர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். கடுமையான முதுகு தண்டு நோய்! (Ankylosing Spondylitis). யாத்திரையின்போது எதிர்கொள்ள நேர்ந்த ஏதோ உலோக நச்சு பொருள் தான் காரணம் என்று டாக்டர்கள் சொன்னதை அவர் ஏற்றுக் …

>>

இன்று பி.வி.நரசி்ம்மராவ் பிறந்த தினம்/ சுரேஷ் கண்ணன் 

இந்தியாவின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தின் வரலாற்றை, அதன் பின்னுள்ள புதிர்களை, வளர்ச்சிகளை மிக நெருக்கமாக காணும் அனுபவத்தைத் தருகிறது.

>>

திருச்சி பயணத்தில் இன்னொரு புத்தகம்/அழகியசிங்கர்

படித்துக்கொண்டிருப்பேன். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக்கொண்டிருப்பேன். ரயில்

>>

இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்.

புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.
ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன் குறித்து எஸ்.சண்முகம் எழுதிய புத்தகம்.
சாகித்திய அகாதெமி சிறந்த முறையில் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு

>>

விட்டல் ராவின் எழுத்துச்சித்திரம்/எஸ்ஸார்சி

விட்டல் ராவ் மூத்த எழுத்தாளர். பெங்களூரில் தற்காலம் வசித்துவருகிறார்.தொலைபேசித்துறை எத்தனையோ எழுத்தாளர்களை தமிழ் எழுத்துக்களத்திற்கு அனுப்பி இருக்கிறது. அந்த எழுத்தாளர் திருக்கூட்டத்தில் விட்டல் ராவ் பெருமைக்குறியவர்.

>>

“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து/அழகியசிங்கர்

சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன் பாலா üஅந்த நாட்க

>>

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’/அழகியசிங்கர்

எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

>>

ஒற்றன்! – அசோகமித்திரன்

அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு’க்குச் சென்ற அசோகமித்திரனின் அனுபவங்களை, நாவலாக – வித்தியாசமான புனைகதை வடிவில் – எழுதியுள்ளார். பெயரைப் பார்த்தவுடன் ‘ஏதோ போர்க்கால, சரித்திர அல்லது இந்திய சுதந்திரப் போராட்டம் சார்ந்த புனைவோ என நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. அனுபவமும் புனைவும் பி

>>