செல்லம்மாள் பாரதி/11. நவ இந்தியா உதயம்
வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம், சுயராஜ்யத்தின் அவசியம் இவைகள் தேசமெங்கும் அலையடிப்பதுபோல் முழங்க ஆரம்பித்தன. நம் மக்களின்
மனதில்கூட (அந்த அடக்குமுறை ஆளுகையினால்) அடிமை மனப்பான்மை தகர்க்கப்பட்டுவிட்டது. ‘விடுதலை’யில் பேராவல் எங்கு பார்த்தாலும் அதிகமாயிற்று.
