கண்ணுக்குள் பூத்த கனல்
என்ற ஈற்றடியில் என்பாக்கள்…

எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.

>>

கு.மா.பா.திருநாவுக்கரசுவின் இரு
என்பாக்கள்

மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-

>>