ஆசிரியர் பக்கம்

வணக்கம் 28.09.2021 இது புதிய முயற்சி.   கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இது சாதாரணமான பத்திரிகை இல்லை.  இப் பத்திரிகையில் எல்லாவித முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.  இதை வாசிப்பவர்களும் ஆச்சரியப்படலாம். நவீன விருட்சம் இதழ் 1988ஆம் ஆண்டு வந்தபோது, தொடர்ந்து 33 ஆண்டுகளாகத் …

>>

சோமசுந்தரி கவிதை

🌷க.சோமசுந்தரி. நினைவுகளின்பெரும் சுமையில்…இன்றும்!தனியே விடபட்ட மனதுபேசி சென்றது! கடந்த நெடுந்தூரப் பயணத்தில்…திரும்பி நடக்க முடியாமலேயேவாழ்வில்…பூக்களாய் உதிர்கிற சில தருணங்கள்! வாழ்ந்த காலத்தில்அனுபவங்களை கடந்தும்… நேற்றைய மிச்சத்தின்எச்சங்களாய் சுவடுகளைபதித்த சென்றதடங்கள்! அன்போ…அனுசரணையோ..எதுவுமற்ற வெற்றிடத்தில்சூழ்நிலை தான் நிர்ணயிக்கிறதுமனிதனின் வீழ்ச்சிகளில்உண்மை எதுவென்று? இப்படித் தான்! இன்றும்!பிரபஞ்சம் …

>>

ஜீவனில்லா ராமசாமி

கவிஞர்.செ.புனிதஜோதி எலும்பும் தோலுமாய்ஜீவனை மட்டும்தாங்கிநிற்கும்பெரியவரின்உருண்டு நிற்கும்வெள்ளை வேட்டியும்கிழிந்துவிடக் காத்திருக்கும்வெள்ளைசட்டையும்யாரும் சொல்லாமலேவறுமையின் முகவரியைஎடுத்துக்காட்டியது… நிறைமாத மகளைஅழைத்துவந்து அரசுமருத்துவமனைக்குள்சேர்த்துவிட ஆயிரத்தைகைமாத்தா வாங்கிவரஆயிரம் முறையாவதுசெல்லப்பன் வீட்டுக்குநடையாநடந்திருப்பாரு… ஒருநொடிக்குள்ள ஆயிரம்மறைஞ்சு போன மாயத்தஎண்ணி அரசுமருத்துவமனையில்இலவசம் பெயர் பொரித்தபலகையே வெறித்தேப் பார்கிறார்ஜீவனில்லாராமசாமி

>>

ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை

அழகியசிங்கர் அவளா இவள் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஒருநாள் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தான். 40 வருடங்களுக்கு முன் பார்த்தது. கதவைத் தட்டினான். திறந்தாள். அவளா இவள் என்று நினைத்தான். ஏமாற்றமாக இருந்தது.

>>

மலைத்தேன்

சுரேஷ் ராஜகோபாலன் மை தீர்ந்த என்பேனாவுக்குத் தானே ​தெரியுமஎனக்கும் தெரியாமலேஎத்தனை முறைஒரே கவிதையை – என்கை எழுதியிருக்கும் என்று.. வார இதழ் போட்டிக்கும்போனதே தவிரப்பதிலொன்றும் வரவில்லை அத்தனையும் திருப்திதராததால் கசக்கிஎரியப் பட்டன,நொந்து நூலாகின இனிக்கவிதை எழுத மாட்டேன்முடிவுக்கு வந்த பின்னேதான்பரிசு பெற்றசெய்தி …

>>

கவிதைக்காரன்.!

ஆர்க்கே.! “பேப்பர் பழைய பேப்பர்”என்று கூவிச்சென்றவனைமாடிக்கழைத்துநாளிதழ் மற்றும் புத்தகங்களைஎடைக்குப்போட்டேன்.தனித்தனித் தாள்களில்எழுதப்பட்ட என் கவிதைகளைதனியே பிரித்து வைத்தான்.” இது தேறாது” என்றான். “ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்”தருபவனும்“ஓட்டை ஒடசல்களுக்குபிளாஸ்டிக் வாளி” தருபவனும்“பழைய சரிகைப்புடவைக்குநல்லவிலை” தருபவனும்நான் எழுதிய கவிதைத்தாள்களைசீண்டவே இல்லை.புத்தகமாக்கினால் எடைக்காகுமாஎன யோசனை வந்தது.ஏதோ ஒரு …

>>

நத்தை ஒன்று

வளவ. துரையன் மாலைநேர நடை  காலையில் பெய்த மழையால்  தனித்தனியான மனிதர் போலத்  தண்ணீர்த் தேங்கல்கள் அவசரமாய்க் கூடடைய  அவற்றில் தலையாட்டிக் குளிக்கும்  ஆறேழு காகங்கள் நாய்கள் போலவே  அலைந்துகொண்டிருக்கும்  நகரத்து மாடுகள் மழையில் நனைந்ததால்  மகிழ்ந்து சிரிக்கும்  அரளிச்செடி  விமானத்தை  …

>>

துரிதக் கதை

பிடி கவிதையை ஆர் வத்ஸலா பால் குக்கரும் சாதா குக்கரும் இட்லி குக்கரும் போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்தன. வாணலியில் வதங்கிய கத்திரிக்காய் எந்த நிமிஷமும் தீய்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. ஆண்டவன் புண்ணியத்தில், கேஸில் நான்கு அடுப்புகள்தான். அவளுக்கோ இரண்டே …

>>

என்பா கவிதைகள்

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 1 எலியைப் பிடிக்க விரட்டியது பூனை! வளைபோன்ற குழாயுள் பதுங்கியது எலி!  வேட்கையில் பாய்ந்த பூனையின் தலை,  குழாய்வாயில் மாட்டியதே விதி என்பா – 2 பன்முகத் தன்மையின் பெருமிதம் கொள்வார்!  தன்மொழி இனத்தை …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (2)

ஜெ.பாஸ்கரன் அதிகாலை ஆறு மணிக்கு, நின்றபடி கும்பகோணம் காபி குடித்துக்கொண்டிருந்த அந்த தம்பதியருக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கலாம் (இருவருக்கும் சேர்த்து!) – டீ கிளாஸில் கும்மோணம் காப்பி! அருகிலிருந்த கட்டிடத்தில் பல் தேய்த்து, முகம் கழுவி நாங்களும் கு.கா. கிளாஸில் குடித்தோம் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (1).

ஜெ.பாஸ்கரன் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மூலையில், அதிக மழை பொழியும் சிரபுஞ்சி சென்றபோது, அங்கு மலைகளைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டங்களைப் பார்த்து பரவசப்பட்டேன் – மேகங்களின் ஆலயம் – மேகாலயா – எனச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று …

>>