ஞானக்கூத்தன்/சுசீலாவும் பிறரும்
மௌனியும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்.நகுலனும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்மௌனியும் நகுலனும்தெருவில் நடந்தால்சுசீலா ஏன் வரவில்லை என்றுமக்கள் தெருவில் தேடுவார்கள்சுசீலாவும் தோழியும்தெருவில் நடந்தால்மௌனியும் நகுலனும்வரவில்லை என்றுமக்கள் மகிழ்வார்கள்நானும் சுசீலாவும்தெருவில் நடந்தால் மக்கள்என்னையே பார்ப்பார்கள்எப்படி இவளை இவன்பிடித்தான் என்று.
>>