எமிலி டிக்கின்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

ஒரு புத்தகத்தைப் போலப் பெரிய கப்பல் இல்லைநம்மை தூர நாட்டுகளுக்குக் கொண்டு செல்ல,துள்ளும் கவிதையின்ஒரு பக்கத்தைப் போல வேகமான குதிரைகளும் இல்லை. இந்தப் பயணத்தை ஏழையனும் மேற்கொள்ளலாம்சுங்கச் செலவு இன்றியே;மனித ஆன்மாவை சுமக்கும்இந்த ரதம் எவ்வளவு சிக்கனமானது! ********** என் மனதில் …

>>

பி. ஆர்.கிரிஜா கவிதை

பொல பொலவெனபொழுது விடிகையிலேஎழு எழு எனமனது கூறும்படு படுவெனஉடல் கெஞ்சும்கம கமவெனகாலை காஃபிமணக்கையிலேநம நமவெனநா கேட்கையிலேகிடு கிடுவெனஎழத்தான் வேண்டும் ! 22/12/2025 எல்.ரகோத்தமன்/மழை மேகம் – விருட்சம் நாளிதழ்

>>

எல்.ரகோத்தமன்/மழை மேகம்

கணிக்க முடியாமல்கனியாத நீர் துளிகளைசுமந்த மேகக்கூட்டம்அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன வானில்! எப்போது கனியும்!எங்கு போய் கொட்டித்தீர்க்கும்? சில்லென்ற மழைத் தூரல்காற்றில் தவழும் மண்வாசனைவானவில்லின் வசீகரம்மழை ஓய்ந்த அமைதிஈரம் கலந்த குளிர் காற்றுபச்சிலை சொரியம் நீர் முத்துகள்சிறகு சிலிர்க்கும் பறவைகள்விரிந்த கருங்குடைப் பூக்கள் …

>>

விருகை சங்கரன்/தெய்வமே!

அங்கிங்கெனாத படிஎங்கும் நிறைந்தவனாம்! பாமாலை பல பாடிமூச்சை உள்ளடக்கிபூக்களால் அர்ச்சித்துகாணக் கிடைக்காதவன், தெருவோரம் துவண்டுபடுத்திருந்த பாட்டிக்குப்பசியாற பணம்அளித்தபின் அவள் வாயிலிருந்துவந்த வார்த்தை ‘தெய்வமே’..! என்னுளிருக்கும்தெய்வத்தை இன்று நான்கண்டுகொண்டேன்! தெய்வமே! உனக்கு நன்றி! -.

>>