வீடு திரும்புதல் :கூத்தனூர் பயணம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.

>>