மெளன விரதம்/உமா சக்தி

இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!

>>

1. இரண்டணா/சுஜாதா

மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார்.  வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி

>>

கம்பன் கவியமுதம்—36/வளவ. துரையன்

அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் மிகச் சிறுமியர்; அவர்கள் களவு நெறி அறியாத காமப்பார்வை கொள்ளாத நுளைச்சியர் ஆவர். அவர்கள் பறிக்கப்பட்ட பாக்கை முறம் நிறைய வாரி வந்து கொழிக்கிறார்கள்.

>>

இலக்கிய இன்பம் 36/கோவை எழிலன்

ஒரு பெண் முத்து கோக்கப்பட்ட புல்லாக்கு என்ற மூக்கணியை அணிந்து கொண்டுள்ளாள். அதை அழகாக வருணிக்கும் பாடல் இது. முத்தானது அப்பெண்ணின் பற்களின் அழகிற்குத் தோற்றுப் போய் அந்தப் பற்கள் வாழும் வீடான வாயின் முன்னே தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கியது போல் இருந்தது அவள் மூக்கணி. சிவப்பிரகாச சுவாமிகளின் அந்த அழகான பாடல் இங்கு.

>>

பல்லை எடுக்க வாரீயளா?/- எஸ். எல். நாணு

அதுல விஷயம் என்னன்னா..
வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு…..

>>